Thursday, February 11, 2016

வெற்றிப் பாதையிலே...


            என்னுடைய பெயர் S. மோனிஷா. நான் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் . என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் போதிய மதிப்பெண் இல்லாத காரணத்தால் என்னால் நான் நினைத்த பாடப்பிரிவை எடுக்க இயலாமல் போய்விடுமோ என அஞ்சி கொண்டு இருந்த வேளையில், கல்லூரியின் தாளாளர், திரு. D. மரிய விக்டர் அவர்கள் கொடுத்த மன தைரியத்தால் நான் படிக்க நினைத்த இயந்திரவியல் பிரிவை தேர்ந்தெடுத்து தற்போது வகுப்பில் முதல் மாணவியாக திகழ்கிறேன். நான் தமிழ் வழிக் கல்வி மாணவி என்பதால் எனக்கு ஆரம்பத்தில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் பயில மிகவும் சிரமமாக இருந்த அத்தருணத்தில் எமது கல்லூரியில் நடத்தப்பட்ட "Funtastic English" என்ற நிகழ்ச்சி எனக்கு மட்டும் அல்ல என்னுடன் கல்வி பயிலும் அனைவருக்கும் ஆங்கிலத்தைக் குறித்து ஏற்பட்ட பயம் படிப்படியாக குறைந்தது. முதல் ஆண்டு இறுதியில் Car Project ஒன்றில் உறுப்பினராக இருந்தேன். இதனால் என்னுடைய பொறியியல் படிப்பின் முதல் ஆண்டிலேயே "Automobile" பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கார் ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்லூரியின் தலைவர் திரு. D. பீட்டர் ஜேசுதாஸ் அவர்களால் ரூ. 55000 பரிசு தொகையாக வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கல்லூரி நிர்வாகத்தால் ஒவ்வொரு நாளின் இறுதியில் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட C++, JAVA, Quantitative Aptitude, English Language Training ஆகிய வகுப்புகள் பயனுள்ளதாக அமைந்தன. கணித பேராசிரியை Dr. P. சித்ரா தேவி அவர்களால் நடத்தப்பட்டQuantitative Aptitude” ஆர்வத்தை தூண்டுவதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் SAEINDIA (Society of Automotive Engineers, India) நடத்திய AEROSPACE CONFERENCE-ல் நான் பங்கேற்றேன். இந்த கருத்தரங்கு, இயந்திரவியல் குறித்து பல கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திரு. தாமோதரன் சுப்ரமணியன், மூத்த துணைத் தலைவர், Safran Engineering Servicesஅவர்கள் என்னை ஊக்குவிக்கும் முறையில் எனது பொறியியல் படிப்பின் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் Aerospace தொடர்பான Project செய்து, மிகவும் சிறப்பாக Presentation செய்ய வேண்டும் என்று கூறினார். Ministry of Human Resource Developmentநிதியுதவியுடன் ஏழு IIT மற்றும் IISC, Bangalore-ன் கூட்டு முயற்சியால் நடைபெறும் NPTEL (National Programme on Technology Enhanced Learning)ன்Online Certification Course” க்கான வகுப்புகள் எங்கள் கல்லூரியில் நடைபெறுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. SAE( Society of Automotive Engineers) மற்றும் Gautham Buddha University இணைந்து டெல்லியில் 2016, மார்ச் 28 முதல் 31 வரை நடக்கவிருக்கும் போட்டியில் எங்கள் கல்லூரியிலிருந்து சக மாணவர்கள் 25 பேர் கலந்து கொள்ள இருக்கிறோம்.
           கல்லூரியின் சார்பாக பல தொழில் முறை மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கின்றனர். எங்கள் பாடங்களை நடத்துவதோடு எங்களைச் சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல் சமூக நல ஆர்வலர்களாகவும் உருவாக்கி வரும் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரிக்கு நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

No comments:

Post a Comment